Sunday, January 1, 2012

இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக்கொலை

கனடாவின் சர்ரே நகரத்திலுள்ள பல்பொருள் அங்காடியில் பகுதி நேர வேலை செய்யும் இந்திய மாணவர் அலோக் குப்தா( 27) கிறிஸ்துமஸ் தினத்தன்று கடைஉரிமையாளருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட அன்று மதியம் கடைக்கு சென்றார். அப்போது கடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் துப்பாக்கியால் குப்தாவை கண்மூடி தனமாக சுட்டான். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் வழியிலே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் கடையில் திருட வந்தவன் தான் அவரை சுட்டுள்ளான் என கருகின்றோம்.கும்பல் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com