Wednesday, January 4, 2012

போலி டொலர்களை சிங்கப்பூர் கொண்டு செல்ல முயன்ற நபருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

சிங்கப்பூருக்கு போலி டொலர்களை கொண்டு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்து வருட காலம் ஒத்தி வைத்த இரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபா அபராதமும் விதித்தார்.

தம்புல்ல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டவராவார். பிரதிவாதி நீதிமன்றில் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

2008 , பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பிரதிவாதி ஒரே இலக்கம் கொண்ட இருபது போலி டொலர் நோட்டுக்களை சிங்கப்பூர் கொண்டு செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com