Tuesday, January 3, 2012

டெங்கு தாக்கிய வவுனியா மாணவன் யாழ் வைத்தியசாலையில் மரணம்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட வவுனியா பாடசாலை மாணவன் ஒருவர் நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். புதுவருட கொண்டாட்டத்திற்காக வவுனியாவிலிருந்து மாணவனும் அவரது தாயாரும் கிளிநொச்சியிலுள்ள தமது உறவினருடைய வீட்டிற்கு கடந்த 31ம்திகதி சென்றனர். அங்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இவர் தனியார் வைத்தியாசாலையில் சிகிச் பெற்று திரும்பினார்.

ஆயினும் சுகம் ஏற்படாததைத் தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

யாழ். போதனா வைத்தியசாiலியில் சிகிச்சை பலனின்றி இவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

வவுனியா உப்புக்குளத்தைச் சேர்ந்த புஸ்பராசா பிரவீன் வயது 17 என்ற மாணவனே இவ்வாறு மரணமானவராவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com