Wednesday, January 4, 2012

வட - கிழக்கு மாகாணங்களில், 53 மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்.

புதிய மகளிர் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள், அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தலைமையில், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சில் வழங்கப்பட்டன. அரச அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றுவதற்காக, சகல பிரதேச செயலக பிரிவுகளிலும், மகளிர் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களை நியமிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்பதவிக்காக, வடக்கு கிழக்கு மாகாணங்களில், காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அமைச்சின் செயலாளர் சுமித்ரா ராகுபத்த உள்ளிட்டோரும், கலந்து கொண்டனர்.

மனிதாபிமான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, வடக்கு கிழக்கு மாகாணங்களில், அரச சேவைக்காக கூடுதலான உத்தியோகத்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை, இதுவே, முதல் தடவையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com