Friday, January 20, 2012

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய 3 சந்தேக நபர்கள் கைது

கடந்த மார்ச் 2009 ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்திய வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இலங்கை வீரர்களான ஜெயவர்த்தனே, திலன் சமரவீரா, குமார சங்ககாரா, அஜந்தா மெண்டிஸ், தரங்கா பிரனவினதா, சமிந்தா வாஸ் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தார். இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஏற்கனவே பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்ந நிலையில் மீண்டும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் டெயிலி டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அவர்கள் மூவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதும், அவர்கள் முன்பிணை பெற்றிருந்தமையால், கைது செய்ய முடியாமல் போனதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் லாஹுர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த பிடிவிராந்தின் அடிப்படையில் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com