Monday, January 2, 2012

இரத்தினபுரி கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 31 பேர் காயமடைந்தனர்.

ஹந்தானையிலிருந்து கொழும்பு நோக்கி பயணமான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஒன்று கொஸ்கெல்ல பகுதியில் பள்ளத்தில் பாய்ந்ததால் இவ்விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை ஏற்பட்ட இவ்விபத்தில் 31 பேர் காயமடைந்தனர். இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹவத்த பொலிஸார் தெரிவித்தனர். கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் இருவர் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக கஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com