Monday, January 2, 2012

விபசாரத்தில் ஈடுபட மறுத்த சிறுமி சித்ரவதை: மாமியார் உள்பட 3 பேர் கைது

ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலை சேர்ந்தவள் சஹார் குல் (15). இவளை அவளது அண்ணன் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் என்ற பெயரில் ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்றுவிட்டார். ஆனால் அவளை மாமியார் விபசாரத்தில் ஈடுபடும்படி வலியுறுத்தினார். அதற்கு சஹார்குல் மறுத்தாள்.

எனவே அவளை வீட்டின் பாதாள அறையில் உள்ள கழிவறையில் 6 மாதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர். அவளை அடித்து உதைத்தும், கை விரல் நகங்களை பிடுங்கியும், முகம் மற்றும் உடலில் சிகரெட்டினால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தினர்.

இக்கொடுமை கடந்த 6 மாதமாக நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமி சஹார்குல்லை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக சாஹர்குல்லின் மாமியாருயும், அவரது உறவுக்கார பெண்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதேநேரம் பதுளை - மெதபத்தான பகுதியில் குடித்துவிட்டு வீடு சென்று மனைவியுடன் கலகத்தில் ஈடுபட்ட கணவனை மனைவி பொல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவமொன்று இன்று (02) இடம்பெற்றுள்ளது.

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியுடன் கலகத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது அடியை தாங்கிக் கொள்ள முடியாது ஆத்திரமடைந்த மனைவி கணவனை பொல்லால் தாக்கியுள்ளார்.

அதிக போதையில் இருந்தமையால் கணவன் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சந்தேகநபரான மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com