Tuesday, January 3, 2012

கடந்த ஆண்டில் 179 பேர் யாழ் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் 179 பேர் தற்கொலை செய்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தூக்கில் தொங்கி 56பேரும் நஞ்சருந்தி 50 பேரும் நீரில் மூழ்கி 43 நெருப்பில் எரிந்து 30 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு மாதங்களும் இடம்பெற்ற தற்கொலைகளின் விபரங்கள்

ஜனவரி 19பேர்
பெப்பிரவரி 19 பேர்
மார்ச்23 பேர்
ஏப்ரல்17 பேர்
மே 23 பேர்
ஜீன் 15பேர்
ஜீலை 11பேர்
ஒகஸ்ட் 11பேர்
செப்படம்பர் 9பேர்
ஒக்டோபர்11பேர்
நவம்பர் 9பேர்
டிசம்பர் 12பேர் ஆகும்

இவ்வெண்ணிக்கையானது 2010ம் ஆண்டு புள்ளி விபரங்களோடு ஒப்பிடும் போது 21 சதவீத அதிகரிப்பாகவும் காணப்படுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பசுபதி பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com