Thursday, December 22, 2011

ஜே.வி.பி. எல்.ரி.ரி.ஈ. யினரை இணைத்துக் கொண்டு சதிநாச வேலைகளில் ஈடுபட்டால் தண்டனை- பசில்

வடக்கில் ஜே.வி.பி அரசியலில் ஈடுபடலாம்.ஆயினும், ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற குழுவினர் வடபகுதியில் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு சதி வேலைகளில் ஈடுபட்டால் தண்டணை வழங்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் வடபகுதியில் சட்டபூர்வமான அரசியல் செய்வதை அரசாங்கம் வரவேற்கிறது. அது போன்று மேலும் பல தென்னிலங்கை கட்சிகள் வடபகுதியில் அரசியலில் ஈடுபடுவது இனங்களுக்கிடையே நல்லிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு பேருதவியாக அமையும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற குழுவினர் வடபகுதியில் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு சதி வேலைகளில் ஈடுபட்டால் அது குறித்து பொலிஸ் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த வதந்திகள் உண்மையானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com