Friday, December 2, 2011

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திவந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கராம்பு , கஞ்சா, புகையிலை போன்று போதைப் பொருட்களைக் கடத்திவந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் சோதனை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இன்று அதிகாலை 04 மணியளவில். இலங்கை நோக்கி வந்த விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபராவார்.

இவரிடமிருந்து 51 கிலோ என்சால், புகையிலை தூள் தலா 10 கிரேம் அடங்கிய 1000 குப்பிகள், 150 ஹான்ஸ் பைக்கட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com