Wednesday, December 21, 2011

பெண்ணொருவரை வல்லுறவு புரிந்து விட்டு தப்பமுயன்ற இராணுவ லெப்டினல் கைது!

பேருவளை பிரதேசத்தில் பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த இராணுவ லெப்டினல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான இராணுவ லெப்டினன் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவராவார். பேருவளையைச் சேர்ந்த 33 வயதான குடும்ப பெண்ணே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று அதிகாலை காலியில் இருந்து கொழும்பை நோக்கி வந்துகொண்டிருந்தபோது பேருளை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்துள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்த பெண்னை அச்சுறுத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பெண்ணின் கதறலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மக்களும் பொலிஸாரும் சந்தேகநபரை பிடிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இதனை அடுத்து சந்தேகநபர் கடலில் பாய்ந்து தப்பிச் செல்ல முயற்சித்போது, பொலிஸார் படகொன்றின் உதவியுடன் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com