Friday, December 30, 2011

டக்ளஸின் எடுபிடிகள் சபையில் இருக்கும் வரை அமர்வுகளின்போது அடிதடியே இடம்பெறுமாம்.

யாழ் மாநகர சபையின் அமர்வுகள் இன்று இடம்பெற்றபோது ஆழும் கட்சி உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கருத்து மோதல் அடிதடியில் முடிவடைந்துள்ளது. இந்நிலைமைகள் தொடர்பாக மாநகர சபையின் உறுப்பினர் மனுவல் மங்களநேசன் அவர்களிம் இலங்கைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது டக்ளசின் எடுபிடிகள் மாநகர சபையில் இருக்கும் வரை இவ்வாறான நிகழ்வுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகபோகும் நிலையே காணப்படும் என்றார்.

மங்களநேசன் ஈபிடிபி அமைப்பின் மூத்த உறுப்பினர் ஆகும். இவர் கட்சியின் தலைமையை எதிர்த்து வெளியேறியுள்ளதுடன், டக்கிளஸ் தொடர்பான பல ரகசியங்களை அம்பலப்படுத்தப்போகின்றேன் என தெரிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வடகிழக்கில் தமிழர் சுயாட்சி கேட்கின்றனர். சுயமாக மாநகர சபை ஒன்றை நிர்வகிக்க முடியாது , அமர்வுகள் இடம்பெறுகின்றபோது, கலகம் அடக்கும் மேலதிக பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டே வாதங்கள் இடம்பெறுகின்றது. இவ்வாறான நிலையில் இவர்களிடம் முழு நிர்வாகமும் ஒப்படைக்கப்பட்டால் எவ்வாறு இருக்கும் என ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com