Sunday, December 25, 2011

மல்வத்த பீட மகாநாயக்கர்களை சந்தித்த கருஜெயசூரியா, தொடர்ந்து போராடுவாராம்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனநாயகத்தை உருவாக்க, தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக, பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கரு ஜயசூரிய உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், நேற்று கண்டி, மல்வத்து பீட மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரிய பீட அநுநாயக்கர் சங்கைக்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் ஆகியோரை சந்தித்தனர்.

இதனையடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது தாக்குதல் நடாத்தியது தொடர்பில், தாங்களும், பக்கச்சார்ப்பற்ற விசாரணையொன்றை எதிர்பார்ப்பதாக, தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக, மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும், கரு ஜயசூரிய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தார்.

ஐக்கியமின்றி, ஐக்கிய தேசியக் கட்சியினை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல முடியாது என்பதனை, சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இரு வேறு கூறுகளாக பிளவுபட்டு, செயற்படுவதன் மூலம், எமக்கு எக்காரணம் கொண்டும், வெற்றிப்பாதையில் பயணித்த முடியாது. கட்சியின் முக்கியஸ்தர்களை பழிவாங்குவதன் மூலம் எமக்கு, வெற்றியிலக்கினை எட்ட முடியாது. கட்சியினை பின்நகர்த்த நாம் தயாரில்லை. முன்னேற்றகரமான வெற்றியினையே, நாம் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  December 25, 2011 at 5:07 PM  

Farmers plough the land before they sew the seeds.Likewise plough your minds first and then get the blessings.It would be much better.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com