Friday, December 2, 2011

மரியாதையை கேட்டு வாங்கும் நிலையில் மலையக அரசியல்வாதிகள்

சமீபத்தில் இணையதளங்களில் வெளியான ஒரு செய்தி நகைப்புக்கு உரியது. "கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர் அமைச்சர் ஒருவரால் தாக்கப்பட்டராம் " . பிறகு தான் தெரிந்தது. அது எங்கள் தொண்டமான் அமைச்சர் என்று. தாக்கியதற்கு காரணம் "அமைச்சரை கண்டதும் அவர் எழுந்து மரியாதையை செய்யாமல் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு இருந்தாராம். " என்ன வேடிக்கை பாருங்கள்.

எதற்கு எடுத்தாலும் கோபப்படும் ஒரு அரசியல்வாதி இவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வளவு நாள் அதை அவருக்காக ஓட்டு போட்ட மக்களிடம் காட்டிக்கொண்டு இருந்தார். இப்போது நாட்டுக்கே காட்டி விட்டார்.

மக்கள் தானாக மரியாதையை கொடுக்கும் நிலையில் தான் ஒரு அமைச்சர் இருக்க வேண்டும். ஆனால் மரியாதையை கூட கேட்டு வாங்கும் இவர்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது ....?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com