Wednesday, December 7, 2011

இலங்கை இந்தியா விமான சேவை மேலும் விரிவாகின்றது.

ஸ்ரீ லங்கன் விமான சேவை, தமது விமானப்பயணங்களை விஸ்தரித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் விரிவுபடுத்தப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் விமான சேவைகளுக்கு மேலதிகமாக மேலும் 4 விமான சேவைகளை நடாத்த, ஸ்ரீ லங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், இந்தியாவின் சென்னை நகருக்கும், பாகிஸ்தானின் கராச்சி நகரத்திற்குமான விமான சேவைகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த நகரங்களுக்கிடையிலான விமான சேவைகள், 28 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இலங்கை-இந்திய, பொருளாதார சுற்றுலா உறவுகளை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு முதல் காத்மண்டு மற்றும் டாக்கா ஆகிய நகரங்களுக்கும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com