Saturday, December 3, 2011

இசைமூலம் வைத்தியம்.

மருந்துகளினால் மாத்திரம் அல்ல இசையினாலும் நோயாளர்களை குணப்படுத்தும் புதிய முறை தற்போது நாடு முழுவதிலும் வைத்தியசாலைகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இதனை மிகவும் முறைசார்ந்த சிகிச்சையளிப்பாக பயன்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே தனது தாயின் இதய துடிப்பை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப தன்னை தயார்ப்படுத்திக் கொள்கின்றது. இந்த அடிப்படை கோட்பாட்டிற்கு அமைய நோயாளர்களை குணமடையச் செய்வதற்காக இசைச் சிகிச்சை பயன்படுத்தப்படுகின்றது.

மருந்து அல்லது சத்திர சிகிச்சைகள் தவிர்ந்த ஒரு விசேட சிகிச்சை முறையாக இது கருதப்படுகின்றது. இந்த செயல்முறை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் நேற்று பரீட்சாத்திக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com