Sunday, December 18, 2011

எப்பாவெல கட்டியாய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக் கொலை

எப்பாவெல யாய முதலாம் கட்டியாய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் நேற்று சனிக்கிழமை இரவு கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாய் (வயது 49), அவரது சகோதரி (வயது 55), மகள் (வயது 23)இ,மருமகன் (வயது 23), ஆகிய நால்வருமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் இராணுவ வீரர் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது கொலையா? தற்கொலையா? என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா ஸ்ரீராமபுரம் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவ நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் சிற்றூழியராக பணிபுரிந்து வந்த (32 வயது) 2 பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comments :

Anonymous ,  December 18, 2011 at 10:12 AM  

The police department and the justice department must take maximum steps to bring all these criminal activities under control.Maximum punishment is the best reward for the criminals.
VIP's should keep away by influencing the authorities in order to favour the criminals.Unfair favourism would make more and more violeces,
ultimately this may lead the country into a greater disaster.
Prevention is better than cure.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com