Tuesday, December 20, 2011

நேட்டோ படைகளுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக பாகிஸ்தானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

பாகிஸ்தானில் லாஹொர் நகரில் இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நேட்டோ படைகளின் ஆளில்லா விமானம் மூலம் அண்மையில் 24 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்று ஆர்ப்பாடடங்கள் இடம்பெற்றன. இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பெஷாவோர் நகரிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். ஜமாத் ஈ இஸ்லாம் கட்சியின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. பாகிஸ்தானின் பிழையான கொள்கைகள் காரணமாக பயங்கரவாதமும் அடிப்படைவாத அமைப்புக்களும் உருவாகியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டுமெனவும் இந்தியா அரசுடன் எவ்வித தொடர்புகளையும் மேற்கொள்ள தேவையில்லையெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

1 comments :

Anonymous ,  December 20, 2011 at 10:11 AM  

You've mortgaged the whole country for petty cocessions and you got the
disastrous results.Now you realize how hard it is....!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com