Saturday, December 3, 2011

வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் நூல் வெளியானது.

இலங்கையில் வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பாகங்களைவிட வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூலக் கல்வி பிரிவு ஒரு எழுத்தாளருடைய நூலொன்றுக்கு வெளியீட்டு விழா வைப்பது என்பது முதற் தடவையாக கொள்ளக் கூடியதாகவும் இதனை ஏனைய மாகாணக் கல்வி வலயங்களும் எழுத்தாளர்களுக்கு இவ்வாறான சிறந்த ஊக்குவிப்புக்களை வழங்க முன் வர வேண்டும் என எல்லோராலும் நன்மாராயம் கூறப்பட்ட நூல் வெளியீட்டு விழா. வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூலப் பிரிவின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சுமைரா அன்வர் எழுதிய வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் நூல் நூல் வெளியீட்டு விழா வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூலப் பிரிவுக்கான பிரதிக் கல்விபணிப்பளார் யூ. எம். பீ. ஜெயந்திலா தலைமையின் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார், கலாபூசணம் பீ. எம். புன்னியாமீன், பன்னூலாசிரியர் எ. எல் எம். றாசீக் உட்பட பல கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com