Monday, December 19, 2011

ரயில் வணடியின் பரிசோதககர் கொலை! சந்தேக நபர் கைது.

இரவு தபால் ரயில் வண்டியின் பரிசோதகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தபால் ரயில் வண்டியின் பரிசோதகர் ஒருவர், நேற்று முன்தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த பரிசோதகருக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையில் வாக்கு வாதம் நீண்டு சென்றுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலினால், ரயில்வே பரிசோதகர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது, உயிரிழந்திருந்ததாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பனாவௌ, பிங்கிரிய பகுதியை சேர்ந்த ஆர்.எம். வீரசிங்க என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோதலுடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சந்தேக நபர் ரம்புக்கனை ரயில் நிலையத்தில் வைத்து, நேற்று அதிகாலை ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ரயில்வே திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com