Friday, December 23, 2011

யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையேயான மோதலில் 48 பேர் பலி!

கடந்த ஆண்டு 200 காட்டு யானைகள் இறந்துள்ளன. யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலில், 48 பேர் உயிரிழந்தனர் வனவள பாதுகாப்பு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்தகவலில், 75 யானைகள், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளன. விவசாய நிலங்களில் வைக்கப்பட்ட பொறிகளில் சிக்குண்டு 20 யானைகள் கொல்லப்பட்டன. வெள்ளத்தினால் 15 யானைகளும், ரயில்களில் மோதுண்டு 10 யானைகளும் உயிரிழந்துள்ளன.

திருகோணமலை ரயில் வீதியில் கல்லோயா மற்றும் கந்தளாய் பகுதிகளில் கூடுதலான யானைகள், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளன. அடுத்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களை குறைப்பதற்கு, 100 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. மோதல்களை தவிர்ப்பதற்கு, அரசாங்கம் பல விரிவான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி, இலங்கையில் 5 ஆயிரத்து 879 காட்டு யானைகள் காணப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com