Tuesday, December 20, 2011

வீரர்களுக்கான சம்பள நிலுவையில் 46 சதவீதம் கிரிக்கெட் பேரவையினால் செலுத்தப்பட்டது

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்க வேண்டியுள்ள நிலுவை சம்பளத்தில் 46 வீதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை செலுத்தியுள்ளது. வீரர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட்டிற்கு பொறுப்பான அதிகாரியும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான உதய செனவிரத்ன சர்வதேச கிரிக்கெட் பேரவையால் வீரர்களின் நிலுவை சம்பளத்தின் 46 வீதம் செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீரர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com