Wednesday, December 21, 2011

வவுனியா இடைத்தங்கல் முகாமில் 18 லட்சம் ரூ பெறுமதியான நகை கொள்ளை.

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் 18 ½ இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இங்கு கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் தாலிக் கொடி, மாலை, காப்பு, மோதிரம் ஆகிய பொருட்கள் என ஓமந்தைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஓமந்தைப் பிரதேசத்தில் 1½ ஏக்கர் அளவுக் காணியில் இடைத்தங்கல் முகாம் அமைந்துள்ளன. அந்த தற்கால முகாமில் சாதாரண மக்களே உள்ளனர். அந்த தற்காலிகக் கூடாரத்தின் துணியை வெட்டி கூடாரத்தில் இருந்த கைப்பைக்குள்ளிருந்த தங்க நகையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com