Saturday, December 24, 2011

காதல் புரிந்த தனது 17 வயது மகளை அடித்து உதைத்து கொன்ற தந்தை

பாடசாலை செல்லும் வயதில் காதல் புரிந்தார் என்பதற்காக தனது சொந்த மகளை தந்தை ஒருவர் அடித்து உதைத்து கொலை செய்த சம்பவமொன்று கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை - கல்அரிச்சல் 2ம் பிரதேசத்தில் நேற்று மாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகள் ஒருவரை காதலிக்கிறார் எனவும் அந்த ஆணுடன் சுத்தித் திரிவதாகவும் அயலவர்கள் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை கேட்ட தந்தை வீட்டுக்கு வந்து தனது மகளை கண்டித்துள்ளார்.

இதன்போது அவர் தனது மகள்மீது கடுமையான முறையில் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது .

இந்நிலையில் அந்த மாணவி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

17 வயதுடைய முத்து முஹம்மது ஜஹான் என்ற யுவதியே உயிரிழந்தவராவார். இந்த சம்பவத்தை அடுத்து நேற்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு மாணவியின் தந்தையான முத்து முஹம்மட் என்பவரை கைது செய்துள்ளனர்.

1 comments :

Anonymous ,  December 24, 2011 at 7:52 PM  

We think still they live in stone age.Maximum punishment is the best treatment for the murderer.Let the punishment be a good lesson for others who lose their common sense.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com