Friday, December 23, 2011

15 கா.பொ.த சா/த பரீட்சாத்திகள் தடை! 12 அதிகாரிகள் பதவி நீக்கம்!

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் போது 15 மாணவர்களுடைய பரீட்சை தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் ஜனரல் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் 4 பேர்களுடன் பரீட்சை கடமைபுரியும் அதிகாரிகள் 8 பேர்களுடைய கடமையினையும ரத்துச் செய்துள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு வர முடியாது என தடை விதிக்கப்பட்ட 15 பேரும் மோசடியில் ஈடுபடுவதற்காக வேறு பெயர்களில் வருகை தந்தவர்களும் , பரீட்சை மேற்பார்வையாளருடன் முரண்பட்டவர்களுமே தடைசெய்யப்பட்ட பரீட்சாத்திகள் ஆவர் என்று ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் அரச பணி புரியாமல் பொறுப்புணர்ச்சியற்ற முறையில் அரச பணி புரிந்தவர்கள் உட்பட தினசரி பரீட்சைக்கான பணிபுரியும் அதிகாரிகள் 8 பேர்களுடைய சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட க. பொ. த. சாதாரண பரீட்சை 21 ம் திகதியுடன் முடிவடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com