Monday, December 5, 2011

14ஆம் திகதி தனியார் பஸ் பகிஷ்கரிப்பு

இம்மாதம் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர், தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ளாவிடில், முன் அறிவித்தலின்றி தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கத்திடம் கோரி, ஏற்கனவே தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்து, பின்னர் அது வாபஸ் பெறப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com