Monday, December 5, 2011

12 யாசகர்களை கல்லால் அடித்துக் கொன்ற நபர் கைது

பிச்சைக்காரர்கள் 12 பேரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் போது பிச்சைக்காரர்கள் கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கொட்டாஞ்சேனை, மொரட்டுவ, களனி, கொள்ளுபிட்டி, வெள்ளவத்தை, கல்கிஸ்ஸை, கிரிபத்கொட, கொம்பனித்தெரு, மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளில் குறித்த சந்தேகநபர் பிச்சைக்காரர்களை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தலையில் கல்லால் தாக்கப்பட்டே குறித்த 12 யாசகர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இக்கொலைகளை செய்தமைக்கான நோக்கம் உட்பட மேலும் பலவிடயங்கள் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com