Wednesday, December 7, 2011

சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக 10 இலட்சம் கையெழுத்து வேட்டை

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி 10 இலட்சம்பேரின் கையொப்பங்களைத் திரட்டி ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் மகஜர் ஒன்றைக் கையளிக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்தில், இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு மாநகர மேயரின் அலுவலகத்திலிருந்து ஆரம்பமாகும் எனவும்,இந்த கையெழுத்து பெறும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலைமை தாங்கவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com