Tuesday, November 1, 2011

தங்கத்தைக் கடத்த முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சென்னைக்கு தங்கம் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து கொழும்பு வந்த 25 வயதுடைய நபர் ஒருவரே மீண்டும் சென்னை செல்வதற்காக இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த போது சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த 170 கிராம் தங்கத்தை காபன் தாளில் சுற்றி கம்பளம் ஒன்றில் மறைத்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com