Thursday, November 10, 2011

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவையே சீனா குறிவைக்குதாம்! ஜார்ஜ் புஷ்

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் சீனாவின் குறியாக உள்ளது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். தனிப்பட்ட பயணமாக மும்பை சென்றுள்ள ஜார்ஜ் புஷ், பல்வேறு நிறுவனங்களின் ( CEO) தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய புஷ், சீனாவின் முதல் இலக்கு அமெரிக்கர் இரணடாவது இலக்கு இந்தியா என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்புடன் இல்லாமல் இருந்திருந்தால், அது மிக ஆபத்தான நாடாக உருவாகி இருக்கும். ஆனால் தற்போது அமெரிக்கா தனது பொறுமையை இழந்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com