Wednesday, November 30, 2011

சபைவிதிகளை மீறி செயற்படும் பா.உ க்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி

பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையின் ஒழுக்கங்களை மீறி செயற்பட்டு சபை நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்தினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படா விட்டால் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com