Sunday, November 20, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இன்று மாலை 6.30 அளவில் இந்த அறிக்கை அவரிடம் கையளிக்கப்படும் என ஆணைக் குழுவின் ஊடக பேச்சாளர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் அதிகாரங்கள் கடந்த 15ம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி செயலகமே தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com