Thursday, November 3, 2011

கல்முனையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை 10.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். கல்முனைக்குடி கடற்கரை வீதியில் வசிக்கும் 45 வயது மதிக்கத்தக்க முஹம்மது இப்றாஹிம் நஜிமுத்தீன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டவர் சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் காவலாளியாக கடமை புரிபவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com