Thursday, November 3, 2011

30 துண்டுகளாக பிரிந்த மண்டையோட்டை மீளப்பொருத்தி மருத்துவர்கள் சாதனை

வாகன விபத்தொன்றில் 30 துண்டுகளாக பிளவடைந்த இளைஞன் ஒருவனது மண்டையோட்டை சிக்கலான அறுவைச்சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்திய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. 9 டைட்டானியம் தகடுகள், 33 திருகாணிகள் என்பவற்றை பயன்படுத்தி 5 மணி நேர சிக்கலான அறுவைச்சிகிச்சையை மெற்கொண்டு ஜக் மார்ரின் டேல் (22வயது) என்ற மேற்படி இளைஞனின் மண்டையோட்டை லண்டன் றோயல் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.

அறுவைச் சிகிக்கையையடுத்து 3 மாதங்கள் கோமா நிலையிலிருந்த ஜக், 9 மாதங்கள் மருத்துவ கவனிப்பையடுத்து பூரணமாக குணமாகியுள்ளதாக மேற்படி அறுவைச்சிகிச்சையில் பங்கேற்ற மருத்துவர் சிமொன் ஹொல்மஸ் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com