Wednesday, November 16, 2011

4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சட்ட விரோத மதுபானத்துடன் மூவர் கைது

கட்டுநாயக்க எவரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சட்ட விரோத மதுபான ஸ்பிரிட் 400 லீட்டர் , 25 கிலோ கிராம் சீனியை கொண்ட 20 பரல்கள், 20அடி நீளமான பைபர் கிளாஸ் படகு ஒன்று உட்பட மேலும் பல பொருட்கள் இந்த சுற்றி வளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீனுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் கட்டுநாயக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com