Wednesday, November 30, 2011

யாழ் வீரசிங்க மண்டபத்தில் ரவீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த தின நிகழ்வு

ரவீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது. வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இந்திய உயர்ஸ்தானிகராலய யாழ் அலுவலகமும் இணைந்து இவ்வைபவத்தினை ஏற்பாடு செய்திருந்தன.

ரவீந்திரநாத் தாகூரின் படைப்பான சாப விமோசனம் எனும் நாட்டிய நாடக நிகழ்வு இதன் போ து அரங்கேற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து வருகை தந்த கத்தகளி மற்றும் மணிப்பூரி நாட்டிய கலைஞர்களான அசிம்பண்டு, பட்டாச்சார்ஜி மற்றும் திம்பாவதிதேவி ஆகியோரின் நாட்டிய நிகழ்வும் பலரது பாராட்டினை பெற்றது.

வடமாகாண ஆளுநர் ஜ.ஏ சந்திரசிறி, இந்திய உயர்ஸ்தானிகராலய யாழ் இந்திய துணை தூதுவர் வி.மகாலிங்கம், யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன் உள்ளிட்ட கலை ஆர்வளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com