Monday, October 31, 2011

வீடுகளில் திருடி வந்த இருவர் நீர்கொழும்பு பொலிசாரால் கைது

நீர்கொழும்பிலும் அயற் பிரதேசங்களிலும் உள்ள வீடுகளிலும் திருடியதாக கருதப்படும் இரு சந்தேக நபர்களை திருடப்பட்ட பொருட்களுடன் கைது செய்துள்ளதாக நீர்கொழும.;பு குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு முன்னக்கரை மற்றும் பசியவத்தை பிரதேசத்தை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர்; சந்தேக நபர்களால் திருடப்பட்ட நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

சிறிய ரக செலி மோட்டார் சைக்கிள் டி வி. டீ பினேயர்,தொலைக்காட்சி பெட்டி ஒன்று மூன்று மோட்டார் சைக்கிள் தலை கவசங்கள் ,மூன்று சைலன்சர்கள் ,வீடியோ கசட் ஒன்று என்பன பொலிசாரால் மீட்கப்பட்ட பொருட்களில் அடங்குகின்றன.சந்தேக நபர்கள் திருடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com