Monday, October 17, 2011

நோயின் உபாதை தாங்காது வயோதிபப் பெண் கிளிநொச்சியில் தற்கொலை

பல வருடம்களாக புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்த வயோதிப மாது ஒருவர் நோயின் உபாதை தாங்காது தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் கிளிநொச்சி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம் திக்காயில் இடம்பெற்றுள்ளது.

திருமதி குமரன் செல்லம்மா (வயது 64) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார் இவரது மரண விசாரணையை கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி ஸ்தலத்தில் வைத்து மேற்கொண்டார்.

சாட்சிகளை கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தயோகஸ்தர் ஆஜர் செய்தார். மரணமானவரின் மகளான திருமதி தினேஸ் லலிதா (வயது24) உறவினரான பேதுருப்பிள்ளை றீற்றா (வயது45) ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

இது தற்கொலை மரணம் என மரண விசாரணை அதிகாரி வழங்கினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com