Saturday, October 29, 2011

மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக 30வரை விண்ணப்பிக்க முடியும்

இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கிறது.

அடுத்த மாதம் 30ஆம் திகதியன்று 16 வயது பூர்த்தியடைகின்ற அனைத்து மாணவர்களினதும் விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என ஆட்பதிவு திணைக்களஆணையாளர் ஜகத் விஜேவீர கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்வி பொது தாரதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகிறது
.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com