Sunday, October 30, 2011

சீன சுரங்கத்தில் வெடி விபத்து: 29 பேர் பலி!

சீனாவில், அரசிற்கு சொந்தமான ‌நில‌க்க‌ரி‌ச் சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சியாலுசோங் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் இந்த எ‌ரிவாயு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

35 பேர் பணிபுரிந்துக்கொண்டிருந்த அந்த சுரங்கத்தில், வெடி விபத்திற்குப் பிறகு 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 29 பேரும் வெடி விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வச் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்டுள்ள 2வது எரிவாயு வெடி விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com