Wednesday, September 28, 2011

மிலிந்த மொரகொடவை நேரடி விவாதத்திற்கு அழைக்கின்றார் முஸம்மில்.

கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐ.தே. கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் ஏ.ஜெ.எம் முஸம்மில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொடவை தொலைக்காட்சியில் நேரடி விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முசம்மில் சவால் விடுத்தார். அவர் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி சேவையில் இடம்பெறும் ரத்துஹிர அரசியல் நிகழ்ச்சியில் நேரடி விவாதத்திற்கு வருமாறு நான் மிலிந்த மொரகொடவிற்கு சவால் விடுகின்றேன், நாங்கள் இருவர் மட்டும் இந்த விவாதத்தில் பங்கு பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com