Wednesday, September 14, 2011

நீ ராஜதந்திரியா இல்லை பொய் பரப்பித் திரியும் மந்திரவாதியா?

யாழ் மக்கள் றொபேர்ட ஓ பிளேக்கிடம் கேள்வி.

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதி செயலாளர் றொபர் ஓ பிளேக் நேற்று காலை இலங்கை விமானப்படையினருக்கு சொந்தமான விசேட விமானத்தில் யாழ் சென்றார்.

முதலில் யாழ் படைத்தளத்தில் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரு சிங்கவைச் சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்துவிட்டு அங்கிருந்து நேராக யாழ் அரசாங்க அதிபர் காரியாலயம் சென்று அங்கு மேலதிக அரசாங்க அதிபரைச் சந்தித்தார்.

தொடர்ந்து இரு சந்திப்புக்களை மேற்கொண்ட அவர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள American corner எனப்படுகின்ற அமெரிக்க தகவல் மையத்திற்கு சென்றபோது பிளேக்கின் வருகையை எதிர்த்து பெரும் ஆர்பாட்டம் ஒன்று நாடாத்தப்பட்டது. றொபேர்ட இன் யாழ் பயணம் இறுதிநேரம் வரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததுடன் எவ்வித ஆரவாரமுமின்றி யாழ் சென்ற அவருக்கு யாழ் அரச அலுவலகத்தில் வழமையாக ராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் எவ்வித வரவேற்பும் அற்ற நிலையில் இந்த கசப்பான அனுபவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

மிக குறகிய கால அவகாசத்தில் பெருந்திரளான மக்கள் அங்கு குவிந்து றொபேர்ட் பிளேக்கின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகவும் கடினமான சொற்பிரயோகங்களுடன் கூடிய பதாதைகளை தாங்கி நின்றனர்.

மக்களின் எதிர்ப்தை மீறி அமெரிக்கன் தகவல் மையத்தினுள் நுழைய முடியாதவராக தனது விஜயத்தை ரத்துச் செய்து கொண்டு நேற்றுப்பிற்பகலே அவர் கொழும்பு திரும்பியுள்ளார்.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com