Wednesday, September 28, 2011

ஆட்கடத்தல் காரர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பா? கியூ பிரிவு பொலிஸாரின் உதவி கோரப்படுகிறது.

34 இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்ல முற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் ( 5 இலங்கையர்கள், 4 கேரள பிரதேசத்தவர்கள்) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 9 பேரும் கலமசேரி பொலிஸ் முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளதாக ஏர்ணாகுள மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஹர்சித அட்லூரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு கியூ பிரிவு பொலிஸார் அவர்களை விசாரணை செய்யும் வரை எதுவித உறுதியான தகவல்களையும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு கியூப் பிரிவு பொலிஸார் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை விசாரணைகளை மேற்கொள்ள வந்துவிடுவார்கள் என குறிப்பிட்ட அவர் தடுத்து வைக்கப்பட்டு அகதிகள் அவர்களுக்கு உரிய முகாம்களுக்கு அனுப்பு வைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அகதிகள் முகாமில் நிலவி வரும் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு மக்கள் வெளியேறி செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என குற்றத் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com