Thursday, September 15, 2011

தேர்தல் ஆணையாளருடன் கட்சி செயலாளர்கள் சந்திப்பு

எதிர் வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையிட்டு தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சி செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நாளை வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிறி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் உட்பட அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் போது கட்சிப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com