Sunday, August 21, 2011

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருகிறது. அமெரிக்கா குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகப் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டுக்கான உலகப் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஆயுதக் கொள்வனவு போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதனை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com