Friday, August 19, 2011

பினாமிகளிடமுள்ள பணத்தை மீட்க பாதாள குழுக்களுடன் களமிறங்கியுள்ளார் பாண்டியன்

புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பணத்தின் பெரும்பகுதி புலிப்பினாமிகளின் பெயர்களில் முதலீடு செய்யப்பட்டது.முள்ளி வாய்காலில் புலிகளின் தலைமை முற்றாக அழித்தொழிக்கப்பட்ட வுடனும்,அவ்வியக்கம் அழித் தொழிக்கப்படுவது நிச்சயம் என்பதை உணர்ந்தவுடனும் புலிப்பினாமிகள் அப்பணத்தினை கபராது செய்துகொண்டு புலம்பெயர் புலிகளின் வலையமைப்புக்கு கம்பி நீட்டிவிட்டனர் என்பது யாவரும் அறிந்த உண்மை.

இப்பணங்களை மீட்பதற்காக புலிகளின் புதிய தலைமை என தம்மை முன்னிலைப்படுத்தும் பாண்டியன் குழுவினர் பாதாள உலக குழுக்களுடாக இப்பணத்தினை மீட்க முயற்சி செய்து செய்துவருவதாக தெரியவந்துள்ளது.

1989 ஆண்டு புலிகளியக்கத்தில் இணைந்த பாண்டியன் சில காலங்கள் மணலாறு பிரதேச தளபதியாகவும்,புலிகளின் நிதித் துறை நிர்வாக பொறுப் பாளராகவும் இருந்துள்ளார்.

புலிகளியக்கத்திலிருந்த காலத்தில் பல பொதுமக்களை கொலை செய்துள்ள இவர் 1996ம் ஆண்டு மாங்குளத்தில் 2000 ருபா பெறுமதியான களவு ஒன்றுக்காக றூட் மணியம் என்கின்ற பொதுமகனை மக்கள் முன் சுட்டுக்கொன்ற பெருமைக்குரியவராவார்,மேலும் புலிகளின் நிதித் துறையில் இருந்தகாலத்தில் வவுனியா பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களை கடத்தி கப்பம் வாங்கிய சம்பவங்களும் இவர் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளது.

பாண்டியன் தற்போது நியூசிலாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கிடைக்கப்பெற்று தங்கியுள்ளதுடன் பினாமிகளிடமுள்ள பணத்தினை பெறுவதற்காக காடையர்களை பயன்படுத்த எடுத்துள்ள முயற்சி இவரது இருப்பிடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

பாண்டியனின் பணிப்பின்பேரிலேயே குறிப்பிட்ட பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றது என்பதை உணர்ந்து கொண்ட மக்கள் தற்போது பிரித்தானிய பாதுகாப்பு துறையில் முறையிட்டுள்ளனர். London இல் Bromley என்ற பிரதேசத்தில் சுப்பர் மார்கட் ஒன்றினை வைத்துள்ள சாமி எனப் படுகின்ற நபர் இவ்வாறு முறையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

புலிப்பினாமிகளாக இருந்தாலும் குறிப்பிட்ட குழுக்களின் அடாவடித்தனங்களுக்கு பயந்து பணத்தினை திருப்பி கொடுக்கவேண்டிய தேவை இல்லை.காரணம் தற்போது புலிகளமைப்பு என்று ஒன்று கிடையாது என்பதுடன் இப்பணம் மக்களிடமிருந்து அறவிடப்பட்டபணமாகும். அத்துடன் புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பெயரால் செயற்படுபவர்கள் யாவரும் புலிகளின் சொத்துக்களை கைப்பற்றுவதற்காக செயற்படுகின்றனரே தவிர இப்பணத்தினை கொண்டு மக்களுக்கு ஏதும் செய்யும் நோக்கம் அவர்களுக்கு கிடையாது. அவர்கள் சொத்துக்களை சுருட்டிய பின்னர் மாயமாக மறைந்துவிடுவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com