Friday, August 19, 2011

கிளிநொச்சி அக்கராயனில் சிசுவை கொன்று எரித்த தாய்க்கு விளக்கமறியல்.

பிறந்த சிசுவை கொன்று எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளம் விதவைத் தாயார் ஒருவரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. கிளிநெச்சி அக்கராயன் பகுதியைச்சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க நான்கு குழந்தைகளின் தாயாரான இளம் விதவைப் பெண் ஒருவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரது இரண்டு குழந்தைகள் விடுதி ஒண்றில் பராமரிக்கப்பட்டு வரும் அதேவேளை ஏனைய இரண்டு குழந்தைகள் இவருடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வறுமை நிலையில் வசித்து வந்த இவருக்கு அவரது குடும்ப உறவினர் ஒருவர் உதவிவந்துள்ளார்.

அவருடன் ஏற்பட்ட உறவு காரணமாகவே இவர் கற்பமுற்றுள்ளார். கற்பிணியான இவர் சம்பவ தினத்தன்று வாளியொன்றுடன் கிணற்றடிப்பக்கம் வென்றதாகவும் சிறிது நேரத்தில் அங்கிருந்து பெரிய புகை எழுந்ததையடுத்து அயலவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது பெற்றெடுத்தசிசுவை அவர் துணியால் சுற்றி குழியொன்றில் போட்டு மண்ணெண்ணை ஊற்றி எரித்திருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அயலவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இவரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில் குழந்தை இறந்து பிறந்ததாகவும் அதனால் அந்த சிசுவை தான் எரித்ததாகவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com