Monday, August 15, 2011

மேயர் பதவிக்காக போட்டியிடப்போவதில்லை. அனோமா.

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிட தாம் எதிர்பார்த்திருப்பதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து எந்தத்தரப்பும் தன்னுடன் உத்தியோகபூர்வமாகவோ, உத்தியோகபற்றற்ற விதத்திலோ கலந்துரையாடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக கட்சித் தலைவர்களுக்கு தான் தகவல்கள் அனுப்புவதாக வெளிவரும் செய்திகளை அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.

அத்துடன், தன்னையும், தனது கணவரையும் குறுகிய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேக்காவை விடுவித்துக் கொள்வது மாத்திரமே தனது ஒரே குறிக்கோள் எனத் தெரிவிக்கும் அவர், இதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு சரத் பொன்சேக்காவை நேசிக்கும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com