Monday, August 1, 2011

புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் கண்ணாடிச் சந்திரன் காலமானார்.

புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரும், கண்ணாடிச் சந்திரன் என தோழர்களாலும், பொதுமக்களாலும் அழைக்கப்பட்டவருமான கேசவன் ரவீந்திரன் அவர்கள் கடந்த (28.07.2011) வியாழக்கிழமை சுகயீனமுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் நேற்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் மத்தியகுழு உறுப்பினர்களான சிவநேசன் பவன், ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்றுமாலை 4மணியளவில் கோவில்புதுக்குளம் இந்து மயானத்தில் இடம்பெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திலும், இறுதிக் கிரியைகளிலும், புளொட் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், புளொட் உறுப்பினர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com