Friday, August 19, 2011

10,000 ருபாவால் சம்பளம் அதிகரிக்க வேண்டும். இல்லையேல் வேலை நிறுத்தப் போராட்டம்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ருபாவால் அதிகரிக்கக் கோரும் போராட்டம் ஆரம்பித்துள்ளதாகவும்,இதனை மக்கள் போராட்டமாக முன்னெடுத்துச் செல்ல தேசிய தொழிற் சங்க மத்திய நிலையம் செயற்படும் எனவும் தேசிய தொழிற் சங்க மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான கே. டீ.லால்காந்த தெரிவித்தார்.

10 ஆயிரம் ருபாவால் வேதனத்தை அதிகரிக்கக் கோரும் போராட்டத்திற்காக தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து எடுத்துள்ள தீர்மானத்தை வெளியிடுவதற்காக நேற்று கொழும்பில் நடைபெற்ற தெரழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே லால்காந்த மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com